பூனையைக் காணவில்லை; கண்டுபிடித்துக் கொடுத்தால் பரிசு: ரோஹித ராஜபக்ஷ

🕔 October 1, 2021

ஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது மகன் ரோஹித ராஜபக்ஷ, பூனையொன்று காணாமல் போயுள்ளதாக, தன்னுடைய ‘பேஸ்புக்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த பூனையின் படத்தை, அவர் அந்த ‘பேஸ்புக்’ பதிவில் இணைத்துள்ளார்.

‘பூனை காணாமல் போயுள்ளது. அவளை நீங்கள் கண்டால், எனக்கு ஒரு தகவல் அனுப்புங்கள். கடைசியாக பத்தகன பகுதியில் காணப்பட்டுள்ளது. கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும்’ என, ஆங்கிலத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவின் கீழ், பூனை திரும்பக் கிடைப்பதற்கு பிராத்திப்பதாக பலரும் எழுதியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்