எரிவாயு வர்த்தகத்தில் தனக்கு தொடர்புகள் இல்லை என்கிறார் யோஷித: புகழைக் கெடுக்க வதந்திகள் பரப்பப்படுவதாகவும் தெரிவிப்பு

🕔 August 12, 2021

ள்நாட்டு எரிவாயு வர்த்தகத்தில் பங்குகளைப் பெறுவதற்கு தான் முயற்சிப்பதாக வெளியான வதந்திகளை, மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், பிரதமரின் பணியாளர் தொகுதி தலைமை அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

தனக்கு சொந்தமாக எந்தவொரு எரிவாயு நிறுவனமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள யோஷித, அவரது புகழை கெடுப்பதற்காக போலிப் பிரசாரம் பரப்பப்படுவதாகவும் கூறியுள்ளார்.

அரசாங்கத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய கதைகள் புனையப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது மற்றொரு அப்பட்டமான புனைகதை என்று கூறியுள்ள யோஷித; தாங்கள் தங்க குதிரை வைத்திருப்பதாக முன்னர் வெளிவந்த வதந்திகளைப் போன்றதே இதுவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்