கடனட்டை மோசடி; சீன பிரஜை உட்பட நால்வர் கைது: 30 போலி அட்டைகளும் சிக்கின

🕔 June 21, 2021

டனட்டை மோசடி தொடர்பில் சீன பிரஜை உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளர்.

வாடிக்கையாளர் சேவை நிலையத்தினால் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று, பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட ஏனைய மூவரும் கண்டி, வரக்காபொல மற்றும் கல்கிஸ்ஸை பிரதேசங்களைச் சேர்ந்வர்களாவர்.

சந்தேக நபர்களின் வதிவிடங்களில் பொலிஸார் நடத்திய தேடுதல்களில்; ஒரு மடிக் கணினி, 30 போலி கடனட்டைகள் மற்றும் போலி கடனட்டைகளை உருவாக்குவதற்கான சில பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்கள் இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்