மஹிந்த அணியினர் மூடிய அறைக்குள் பேச்சு; மைத்திரி தரப்புக்குச் சென்றவர்களை அழைக்கவும் முடிவு
![Mahinda - 0134](http://puthithu.com/wp-content/uploads/2015/10/Mahinda-0134.jpg)
இதன்போது, தமது தரப்பில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபாலவின் தரப்புக்கு சென்றுள்ளவர்களை மீண்டும் மஹிந்த தரப்புக்கு கொண்டு வருவது தொடர்பில் பேசப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்படி இந்த முயற்சி வெற்றியளித்துள்ளதாகவும் மஹிந்த தரப்பு தெரிவித்துள்ளது.
தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தை எதிர்ப்பதென்றும், அதேநேரம் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு திட்டங்களை முன்னெடுப்பதென்றும் இந்த கலந்துரையாடலின்போது மேலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாட முன்னாள் திறைசேரி செயலர் பி.பி.ஜெயசுந்தரவை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.