நிதி மோசடி வழக்கிலிருந்து, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விடுவிப்பு

🕔 February 25, 2021

நிதி மோசடி குற்றச்சாட்டு வழக்கு ஒன்றிலிருந்து அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் – குறித்த வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்துள்ளது.

இலங்கை சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் தலைவராக செயற்பட்ட காலத்தில், குறித்த தொழிற்சங்கத்துக்கு சொந்தமான 39 லட்சம் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக, சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார்.

04 வருடங்களாக இடம்பெற்ற குறித்த வழக்கில் இருந்து, நீண்ட விசாரணைகளின் பின்னர் அமைச்சரை விடுதலை செய்வதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா பட்டபெதிகே உத்தரவிட்டுள்ளார்.

பிரதிவாதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் சரியான ஆதரங்கள் சமர்பிக்காத காரணத்தினால், அவரை விடுதலை செய்வதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்