பொலிஸ், காணி அதிகாரங்களை 13 ஆவது திருத்தத்திலிருந்து அகற்ற வேண்டும்; ஏன் என்று காரணம் கூறுகிறார் பைசர் முஸ்தபா

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை 13வது திருத்தத்தின்கீழ் மாகாணசபைகளுக்கு பகிர்தல் தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரை பொறுத்தவரையில், குறித்த அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு பகிரப்படவேண்டும் என்று, அவர்கள் சர்வதேசத்திற்கு கூறுகின்றனர்.
எனினும், உள்ளுரில் சிங்கள மக்களிடம் இதனைக் கூறுவதற்குத் தயங்குகின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, பொலிஸ் அதிகாரம் மாகாணசபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதை தாம் எதிர்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.