கல்முனை கோட்டக் கல்வி பணிப்பாளராக நஸ்மியா நியமனம்

🕔 November 9, 2020

– சர்ஜுன் லாபீர் –

ல்முனை வலயக்கல்வி நிர்வாகத்துக்கு உட்பட்ட கல்முனை முஸ்லிம் பிரிவுக்கான கோட்டக் கல்விப் பணிப்பாளராக சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட ஏ.பி பாத்திமா நஸ்மியா சனூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய பி.எம்.எம். பதுருத்தீன் ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து, இந் நியமனம் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரனால் இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டது.

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தரம் 3 அதிகாரியான இவர், முன்னர் சாய்ந்ததமருது பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்