நாட்டில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இன்று பதிவு
நாட்டில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாக, இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை மட்டும் (இரவு 08:04 வரை) 48 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் நாட்டில் இதுவரை 416 பேர், கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இருப்பினும் இவர்களில் 109 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உலகளவில் 26 லட்சத்து 45 ஆயிரத்து 784 பேர் இதுவரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக பதிவாகியுள்ளது.
இவர்களில் 184,326 பேர் மரணமடைந்துள்ள நிலையில், 07 லட்சத்து 23 ஆயிரத்து 196 குணமடைந்துள்ளனர்.