மருத்துவ பணியாளர்கள் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிப்பு

🕔 April 12, 2020

கொரோனா தொற்றினால் 52 நாடுகளில் 22,073 மருத்துவ பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஏப்ரல் 8ஆம் திகதி வரையிலான கணக்கெடுப்பாகும்.

இந்தத் தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்; அனைத்து நாடுகளில் இருந்தும் முழுமையான தரவுகள் கிடைக்கப் பெறவில்லை என்பதால், இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவப் பணியாளர்களின் பங்கு மிக முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, இத்தொற்றால் பாதிக்கப்படுபவர்களை மருத்துவப் பணியாளர்களே முழுமையாக பார்த்துக் கொள்கின்றனர். அது பரவாமல் இருக்க அவர்கள் போராடுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்