கொரோனாவால் அமெரிக்காவில் 2,40,000 பேர் வரை இறக்கலாம்: வெள்ளை மாளிகை எச்சரிக்கை

🕔 April 1, 2020

மெரிக்காவில் அடுத்த சில வாரங்களில் மட்டும் 01 லட்சத்தில் இருந்து 2,40,000 பேர் வரை கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்க நேரிடும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கணித்துள்ளதுள்ளது.

இது அந்த நாட்டிலுள்ள பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

“அமெரிக்க மக்கள் கடுமையாக சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒருவருக்கு ஒருவர் தனித்து இருத்தல், வீட்டை விட்டு வெளியேறாமல் இருத்தல் உள்ளிட்ட அறிவுரைகளை பின்பற்றுவதை பொறுத்தே இந்த கணிப்பு நிஜமாகுமா அல்லது இந்த கணிப்பைவிட அதிகமான எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்படுமா என்பது தெரிய வரும்”

என அமெரிக்க சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்

இன்று புதன்கிழமை மாலை வரை 4102 பேர் அமெரிக்காவில் கொரோனாவினால் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, அமெரிக்காவில் 190,022 பேர் கொரோனாவினால் இன்று வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்