தேசிய அடையாள அட்டைக்கு பணம் அறவிட, அரசாங்கம் தீர்மானம்
தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்காக, அரசாங்கம் பணம் பெறுவதற்குத் தீர்மானித்துள்ளது.
இதற்கிணங்க, தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் ஒருவரிடமிருந்து, அதற்காக 100 ரூபா அறவிடப்படவுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01ஆம் திகதியிலிருந்து, இந்தக் கட்டணம் அறவிடப்படவுள்ளதாக, வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.