ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெனாண்டோ ராஜிநாமா

🕔 July 5, 2018

னாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெனாண்டோ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இதேவேளை, இன்று வியாழக்கிழமை அவருடைய அலுவலகத்தில் சிறிய பிரியாவிடை நிகழ்வொன்றும் இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றிய பி.பி. அபேகோன் ராஜிநாமா செய்தமையினை அடுத்து, கிழக்கு மாகாண ஆளுநராகக் கடமையாற்றி வந்த ஒஸ்ரின் பெனாண்டோ 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம், ஜனாபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஒஸ்ரின் பெனாண்டோ- இலங்கை நிருவாக சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்ற, மிக சிரேஷ்டமானவர்களில் ஒருவராவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்