மெனிக்கின்ன பள்ளிவாசலுக்கு தீவைப்பு; எலுகொட பள்ளிவாசல் மீது தாக்குதல்

🕔 March 6, 2018

ண்டி – மெனிக்கின்ன பள்ளிவாசலுக்கு தற்போது செவ்வாய்கிழமை இரவு, சிங்க காடையர்கள் தீ வைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று இனவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற தெல்தெனிய மற்றும் திகன ஆகிய இடங்களுக்கு அருகாமையில் மெனிக்கின்ன அமைந்துள்ளது.

இதேவேளை, பேராதனை – எலுகொட பகுதியிலுள்ள பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

தற்போது, கண்டி மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையிலேயே, இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், அக்குரணை மற்றும் மடவளை ஆகிய பிரதேசங்களுக்கும் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்