சிரேஷ்ட ஊடகவியலாளர் துவான் நஸீரின் தந்தை, அப்துல் காதர் காலமானார்
சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.கே.சி. துவான் நஸீரின் தந்தை, கேரளம் திருச்சூர் மாவட்ட கருவன்னூரைச் சேர்ந்த அம்பலத்து வீட்டில் குறிஞ்ஞிபாவு அப்துல் காதர் காலமானார்.
அன்னார் துவான் நஸீர், பிரேம் நவாஸ், நூர்ஜஹான், பைசர் ஆகியோரின் தந்தையும், நூர் பஸ்லியா, ஜெஸீமா, சதீலா, அய்யூப்கான் ஆகியோரின் மாமனாரும், மர்ஹுமா குஞ்சும்பி, முகம்மது (மூர்க்கனாட்) ஆகியோரின் இளைய சகோதரரும், அபூபக்கர் (பிலாஹி), கதீஜா (ஊரகம்), மர்ஹும்களான அப்துல்லாஹ் (மூர்க்கனாட்), அப்துல் ரசாக் (கோழிக்கோடு), அப்துல் ஹசன் (கருவன்னூர்) ஆகியோரின் மூத்த சகோதரரும், ஹுமாயுன் சாகிர், பாத்திமா சாதிரா, சபீனா, சஸ்னா, ராபியா பானு, ருக்கையா, யூசுப், பவாஸ், பாசில், மர்ஹும் சாதிர் ஆகியோரின் அப்பாவுமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று திங்கட்கிழமை மாலை 03 மணிக்கு 131/78 தெமட்டகொட வீதி இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, குப்பியாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.