கிழக்கு ஆளுநர், கடமைகளைப் பொறுப்பேற்றார்
🕔 July 11, 2017
![](https://puthithu.com/wp-content/uploads/2023/10/Kilakkin-Kedayam-750x150-01-.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2024/02/EFC-750X150-02.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2023/12/Atham-Lebbe-01-7500X150-.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2024/01/Abdullah-750X150-03-.jpg)
![](http://puthithu.com/wp-content/uploads/2017/07/Governor-EP-0989.jpg)
கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, இன்று திங்கட்கிழமை காலை தனது கடமைகளை திருகோணமலை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாண ஆளுநராக கடந்த 04ஆம் திகதி, ஜனாதிபதி முன்னிலையில் ரோஹி போகொல்லாகம பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இன்றைய கடமையேற்பு நிகழ்வின்போது, பிரதியமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ்.ஏ. நசீர் அஹமட், நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபதி, கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், உள்ளிட்டவர்களுடன் ஆளுனரின் செயலாளர், திணைக்கள தலைவர்கள்மற்றம் செயலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
![](https://puthithu.com/wp-content/uploads/2024/03/Alahapuri-750X150-01.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2023/10/Fairoos-Express-750x150-01-.jpg)