அக்கரப்பத்தனையில் மண்சரிவு; 20 பேர் பாதிப்பு
🕔 May 30, 2017
![](https://puthithu.com/wp-content/uploads/2023/10/Kilakkin-Kedayam-750x150-01-.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2024/02/EFC-750X150-02.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2023/12/Atham-Lebbe-01-7500X150-.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2024/01/Abdullah-750X150-03-.jpg)
– க. கிஷாந்தன் –
அக்கரப்பத்தனை ஹோல்புறூக் நியூ கொலனி பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை குடியிருப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதோடு, பாறைகளும் சரிந்து வீழ்ந்தன. இதனால் பாதிக்கப்பட்ட 05 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் ஹோல்புறூக் கிறிஸ்தவ தேவாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான உணவு மற்றும் தேவையான வசதிகளை கிராம அதிகாரி ஊடாக நுவரெலியா பிரதேச செயலகம் வழங்கி வருகின்றது.
இதேவேளை இப்பகுதியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு கற்பாறைகள் சரிந்ததாகவும், அதிகாரிகள் அவ்வப்போது வருகை தந்து பார்வையிட்டு சென்றதாகவும் மக்கள் கூறுகின்றனர். ஆயினும், தமக்கு எவ்வித மாற்று தீர்வினையும் அதிகாரிகள் பெற்றுத் தரவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
எனவே, இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் உடனடி தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
![](https://puthithu.com/wp-content/uploads/2024/03/Alahapuri-750X150-01.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2023/10/Fairoos-Express-750x150-01-.jpg)