தேர்தல் கண்காணிப்பு தொடர்பில் பயிற்சி
– அப்துல் அஸீஸ் –
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான (கபே) அமைப்பின் மாகாண மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கு, தேர்தல் கண்காணிப்பு தொடர்பாக பயிற்சி வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை பாதுக்க ‘கித்துல் கன்ந்த’ ரிசோட் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தேர்
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய அம்பைப்பாளர் எம்.எம்.எ .மனாஸ் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், பிரதான வளவாளராக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்ரான ஆர். கீர்த்தி தென்னக்கோன் கலந்துகொண்டதுடன், வளவாளர்களாக சட்டத்தரணி நிசாந்த ஜெயசிங்க, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் தொடர்பாடல் அதிகாரி ஐ. அரவிந்த உட்பட அமைப்பின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.