மூத்த ஊடகவியலாளர் நிலாமின் புதல்வர் காலமானார்

🕔 May 11, 2017

 

– எம்.எஸ்.எம். ஸாகிர் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரத்தின் உப தலைவரும் லேக் ஹவுஸ் தினகரன் பத்திரிகையின் ஆலோசருமான எம்.ஏ.எம். நிலாமின் இளைய மகன் முஹம்மத் றிஷான் (37 வயது) இன்று வியாழக்கிழமை மாலை காலமானார்.

இரு பிள்ளைகளின் தந்தையான இவர், கட்டாரில் தொழில் புரிந்துவிட்டு அண்மையில் தாயகம் திரும்பியிருந்தார். இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர்,  கொழும்பு பெரிய வைத்தியசாலை இருதய சிகிச்சைப்பிரிவில் திங்களன்று அனுமதிக்கப்பட்டார். ஆயினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று மாலை அவர் காலமானார்.

ஜனாஸா நல்லடக்கம் நாளை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு மினுவாங்கொடை கல்லொழுவை முனாஸ்வத்தையிலுள்ள 262/13ஆம் இலக்க இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, கல்வொழுவை ஜும்ஆப்பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறும்.

அன்னாரின் மரணம் தொடர்பில்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்