குளவிக் கொட்டுக்கு இலக்கான 21 பேர் வைத்தியசாலையில் அனுமதி
🕔 November 4, 2016
– க. கிஷாந்தன் –
குளவிகள் கொட்டிமையினால் பாதிக்கப்பட்ட 21 தோட்டத் தொழிலாளர்கள் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லிந்துலை தங்ககலை கீழ்பிரிவு தோட்டத்தில், தேயிலைத் தளிர்கள் கொய்யும் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, இன்று வெள்ளிக்கிழகை குளவி கொட்டுக்கு இலக்காகினர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் சிலர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், மேலும் சிலர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 05 ஆண்களும், 16 பெண்களும் அடங்குகின்றனர்.