விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டு; முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட நால்வருக்கு விளக்க மறியல்
மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உள்ளிட்ட 04 பேரை எதிர்வரும் 07 ஆம் திகித வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் எம். கணேசராஜா உத்தரவிட்டார்.
சிவகீதாவின் வீட்டுடன் இணைந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அறைகளில், விபச்சாரம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் மேயர் உட்பட 09 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சிவகீதா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேக நபர்களில் 05 பேர், நேற்றைய தினம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.