புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை; கட்சித் தலைவர்கள் இணைக்கம்: பிரதமர் தெரிவிப்பு
புதிதாக உருவாக்கப்படவுள்ள அசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது. இது தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாகவும் பிரதமர் கூறினார்.
கொலன்னாவை – சேதவத்த பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இவ் விடயத்தைத் தெரிவித்தார்.
அத்தோடு, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ தலைவர்களும் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதால், இவ்விடயம் குறித்து எவ்வித சர்ச்சைகளும் இல்லையென்றும் பிரதமர் குறிப்பிட்டார்.