முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவின் விளக்க மறியல் நீடிப்பு

🕔 October 7, 2016

Piyasena - 02முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவின் விளக்கமறியல் இந்த மாதம் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று வெள்ளிக்கிழமை பிறப்பித்தது.

அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடந்த ஜூலை மாதம் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

பியசேன நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அரசிடமிருந்து கிடைத்த வாகனத்தை, தேர்தலில் தோல்வியடைந்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த பின்னரும் திருப்பி கொடுக்காத குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்