கல்முனையில் சிறியளவிலான நிலநடுக்கம்
அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேத்தில் நேற்று சனிக்கிழமை இரவு, சிறியளவிலன நிலநடுக்கும் உணரப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சில வீட்டுக்குள்ளிருந்த பொருட்கள் கீழே விழுந்துள்ளதோடு, சுவர் மற்றும் சீமெந்து நிலங்களில் சிறியளவிலான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது..
நிலநடுக்கத்தினால் பாதிப்புகள் ஏற்பட்ட இடங்களுக்குச் சென்று, பொலிஸார் பார்வையிட்டுள்ளதோடு, பொதுமக்களும் பாதிப்புகளைச் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் நேற்று பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டின் மொயாம்பமா நகரின் வடக்கே 50 கி.மீ தொலைவில் பூமிக்கடியில் 114 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் என தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்தியாவிலும் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.