வீடமைப்பு அமைச்சுக்கும், ஐ.நா. மனித குடியிருப்பு அமையத்துக்கும் ஒப்பந்தம் கைச்சாத்து

🕔 August 30, 2016
Agreement - 022
– அஷ்ரப் ஏ சமத் –

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சுக்கும்,  ஐக்கிய நாடுகள் மனித குடியிருப்பு அமையத்துக்கும் (ஹெபிடாட்) இடையிலான ஒப்பந்தம் இன்று செவ்வாய்கிழமை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளா்  திருமதி டப்ளியு.கே.கே. அத்துக்கோரல, ஹெப்பிடாட் இலங்கைக்கான பிரநிதி  ஸ்ரீனிவாசபுரி ஆகியோர், இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

1978ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை –  தேசிய வீடமைப்புக் கொள்கை, தொழில்நுட்ப ஆலோசனை,  கொழும்பின் வரைபடம் மற்றும் அரசின் 10 இலட்சம் வீடமைப்புத் திட்டங்களுக்கும் சமூக பயன்பாடுகளுக்கும் வீடமைப்பு அமைச்சுடன் இணைந்து, ஹெபிட்டாட் இயங்கி வருகின்றது.

எதிா்காலத்தில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடமைப்பு திட்டங்களுக்கு, ஐக்கிய நாடுகள் வீடமைப்பு அமையம் உதவ உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவினால் முன்னெடுக்கப்பட்ட ஜக்கிய நாடுகள் ஹெபிட்டாட் திட்டம் இலங்கை மட்டுமன்றி, ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளிலும் மனித குடியிருப்புக்கு உதவி வருவதாக, அதன் இலங்கைப் பிரநிதி ஸ்ரீனிவாசபுரி தெரிவித்தாா்.

Agreement - 011

Comments

புதிது பேஸ்புக் பக்கம்