‘மரிக்கார்’ ராமதாஸ் மரணம்
இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர் மரிக்கார் எஸ். ராம்தாஸ் தனது 69ஆவது வயதில் நேற்று புதன்கிழமை சென்னையில் மரணமானார்.இலங்கை தமிழ்த் திரைப்பட மற்றும் நாடக எழுத்தாளரும், நடிகருமான மரிக்கார் ராமதாஸ், ‘கோமாளிகள்’ எனும் இலங்கைத் திரைப்படம் மூலம் பிரபலமானார்.இவர் தொலைக்காட்சி நாடகங்கள் பலவற்றிலும் நடத்துப் புகழ்பெற்றுள்ளார்.
சில மாதங்களாக உடல்நல பாதிப்புக்குள்ளான நிலையில், சென்னையில் சிகிச்சை பெற்றுவந்த ராமதாஸ் – நேற்று மரணமானார்.
இலங்கை வானொலி வர்த்தகசேவையில் ஏராளமான வானொலி நாடகங்களை எழுதி, நடித்ததோடு, தயாரித்தும் வழங்கியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒலிபரப்பாகிய ‘கோமாளிகள் கும்மாளம்’ என்ற பிரபலமான நாடகத்தொடரை இவரே எழுதியதோடு, ‘மரிக்கார்’ பாத்திரத்திலும் நடித்து அதையே தனது சிறப்பு பெயராகவும் கொண்டார்.
மேற்படி நாடகம், பின்னர் ‘கோமாளிகள்’ என்ற பெயரில் திரைப்படமாகியது.