‘மரிக்கார்’ ராமதாஸ் மரணம்

🕔 July 14, 2016
Marikkar Ramadas - 975லங்கையின் புகழ்பெற்ற கலைஞர் மரிக்கார் எஸ். ராம்தாஸ் தனது 69ஆவது வயதில் நேற்று புதன்கிழமை சென்னையில் மரணமானார்.இலங்கை தமிழ்த் திரைப்­பட மற்றும் நாடக எழுத்­தா­ளரும், நடி­க­ரு­மான மரிக்கார் ராமதாஸ், ‘கோமா­ளிகள்’ எனும் இலங்கைத் திரைப்படம் மூலம் பிரபலமானார்.இவர் தொலைக்­காட்சி நாடகங்கள் பலவற்றிலும் நடத்துப் புகழ்பெற்றுள்ளார்.

சில மாதங்­க­ளாக உடல்நல பாதிப்­புக்­குள்­ளான நிலையில், சென்­னையில் சிகிச்சை பெற்றுவந்த ராமதாஸ் – நேற்று மரணமானார்.

இலங்கை வானொ­லி வர்த்­த­க­சே­வையில் ஏரா­ள­மான வானொலி நாட­கங்­களை எழுதி, நடித்­த­தோடு, தயாரித்தும் வழங்­கி­யுள்ளார்.

இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மேலாக ஒலி­ப­ரப்­பா­கிய ‘கோமா­ளிகள் கும்­மாளம்’ என்ற பிரப­ல­மான நாட­கத்­தொ­டரை இவரே எழு­தி­ய­தோடு, ‘மரிக்கார்’ பாத்­தி­ரத்­திலும் நடித்து அதையே தனது சிறப்பு பெயராகவும் கொண்­டார்.

மேற்படி நாடகம், பின்னர் ‘கோமா­ளிகள்’ என்ற பெயரில் திரைப்­ப­ட­மா­கி­யது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்