அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும், 05 ஆயிரம் ரூபா இடர்காலக் கொடுப்பனவு உள்ளது: மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் 0
– பாறுக் ஷிஹான் – தகைமையை நிருபிக்கும் ஊடகவியலாளர்களுக்கு 5000 ரூபா இடர்காலக் கொடுப்பனவு நிபந்தனையுடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸ் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு இடர்காலக் கொடுப்பனவு எவ்வாறு வழங்கப்படவுள்ளது என, இன்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வினவிய போதே, அவர் இதனைக் கூறினார்.