
புதிய நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஆரம்பமான நிலையில், இலங்கையின் 10வது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரன்வல நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ரிஸ்வி சாலிஹ் – பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்தக் கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர குழுக்களின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் 10வது நாடாாஸ்ரீளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச – சபாநாயகரால் அங்கீகரிக்கப்பட்டார்.



