கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மாஹிர், கதிரைகள் வழங்கி வைப்பு
– எம்.எம். ஜபீர் –
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி கதிரைகளை இறக்காமம் மர்ஹைபா மகளிர் சங்கத்திற்கு இன்று சனிக்கிழமை வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வு சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எஸ்.எல்.நிஸார் தலைமையில் இறக்காமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எஸ். ஜெமீல் காரியப்பர், இறக்காமம் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் எம்.எல். முஸ்னீ, யூ.எல்.எம். ஜிப்ரி, இறக்காமம் ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் ஏ.கே.ஏ. ரவூப், இறக்காமம் பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் ஏ. சபீர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர் ஏ. றியாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர், மர்ஹைபா மகளிர் சங்கதலைவி சுல்பீக்காவிடம் கதிரைகளைக் கையளித்தார்.