நான்கு வருடங்களில் 05 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள், விருப்பத்தின் பேரில் பாலியல் உறவு வைத்துள்ளனர்: கணக்கெடுப்பில் தகவல்
பதினாறு வயதுக்குட்பட்ட 5,000க்கும் மேற்பட்ட சிறுமிகள் – நான்கு ஆண்டுகளுக்குள் சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் உறவு வைத்துள்ளனர் என்று சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை – நாடு முழுவதிலும் உள்ள 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக 6307 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, கண்டி தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் சட்டத்தரணி பாலித பண்டார சுபசிங்க தெரிவித்தார். அவற்றில் 5055 முறைப்பாடுகள் அவர்களின் சம்மதத்துடன் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17 பொலிஸ் பிரிவுகளில் கடந்த மூன்று வருடங்களாக 16 வயதுக்குட்பட்ட 132 சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் சம்மதத்துடன் உறவு வைத்துள்ளனர் என்றும் டொக்டர் சுபசிங்க கூறியுள்ளார்.
பரிசீலனைக்கு உட்பட்ட மூன்று ஆண்டுகளில் 15 சிறுமிகள் மட்டுமே சம்மதமின்றி பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
16 வயதுக்குட்பட்டவர்களை – அவர்களின் சம்மதத்துடன் பாலியல் உறவுக்கு உட்படுத்துவதும், சட்டப்படி குற்றமாகும்.