முன்னாள் எம்.பி பியசேன விபத்தில் மரணம்

🕔 March 17, 2023

மிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி. பியசேன விபத்து ஒன்றில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் சின்னமுகத்துவாரம் 40ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த அவர் கல்முனை வைத்தியசாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் லொறியொன்றும் மோதிக்கொண்டால் விபத்து ஏற்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கல்முனை ஆதார வைத்தியசாலையில் அவர் சேர்க்கப்பட்டார்.

2010 ஆம் ஆண்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் போட்டியிட்டு பியசேன நாடாளுமன்றுக்கு தெரிவானார்.

எனினும் பின்னர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்கினார்.

2015 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் அதில் தோல்வியடைந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்