ஐந்து நபர்களுக்கு மரண தண்டனை விதித்து கேகாலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

🕔 March 8, 2023

கேகாலை மாகாண மேல் நீதிமன்றம் 05 நபர்களுக்கு இன்று (08) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2014ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி தெவலகம, கஹகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தின் போது சீமெந்துக் கட்டையால் தாக்கி நபர் ஒருவரைக் கொலை செய்ததாக ஐந்து பேர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றவாளிகளுக்கு கேகாலை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகி டி அல்விஸ் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்