அமெரிக்கா பறந்தார் பசில்

🕔 September 9, 2022

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா சென்றுள்ளார்.

அவர் துபாய் ஊடாக அமெரிக்கா புறப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமை முகாமையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் முதலில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் டுபாய் சென்று, அங்கிருந்து மற்றொரு இணைப்பு விமானம் மூலம் அவரின் அமெரிக்க பயணம் அமைந்துள்ளது.

ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நீதிமன்றம் அவருக்கு தடை விதித்திருந்த நிலையில், அண்மையில் அந்தத் தடை நீக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்