கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக சஹ்துல் நஜீம் நியமனம்
– பாறுக் ஷிஹான் –
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக எம்.எஸ். சஹ்துல் நஜீம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான கடிதத்தை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்கா மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் என். புள்ளநாயகம் இருந்து ஆகியோரிடமிருந்து நேற்று (08) பெற்றுக் கொண்டார்.
புதிதாக நியமனம் பெற்றுள்ள கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் பல வருட கால அனுபவத்தினை பெற்றுள்ளார். இவர் ஏலவே சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிள்ளமை குறிப்பிடத்தக்கது.
மருதமுனை பகுதியை சேர்ந்த நஜீம் – விஞ்ஞான பட்டதாரி என்பதுடன் விஞ்ஞான முதுமாணி மற்றும் கல்வி முதுமாணிப் பட்டங்களையும் பெற்றுள்ளார்.
கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி இலங்கை கல்வி நிர்வாக சேவையில் இணைந்து கொண்ட இவர், 2019ஆம் ஆண்டு தரம் 01 க்கு பதவி உயர்த்தப்பட்டார்.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளருக்கான நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.