வெள்ளிக்கிழமைகளில் அரச அலுவலகங்கள் இயங்காது: சுற்றறிக்கை ரத்து

🕔 August 2, 2022

ரச அலுவலகங்கள் வெள்ளிக்கிழமைகளில் இயங்காது என முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொதுப் போக்குவரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வரவுள்ளதைக் கருத்தில் கொண்டு – உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பணிக்கு சமூகமளிப்பதில் அரச துறை ஊழியர்கள் எதிர்நோக்கிய சிரமங்கள் காரணமாக, இந்த சுற்றறிக்கை முதலில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் கடமையில் ஈடுபடுவார்கள் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருளுக்கான QR முறைமை வெற்றிகரமாக பதிவானமையினை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்