அவசரகால நிலை 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

🕔 July 27, 2022

வசரகால நிலையை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் யோசனை நாடாளுமன்றில் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் இன்று (27) இடம்பெற்ற வாத விவாதங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின்போது யோசனைக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருந்தபோது ஜூலை 17ஆம் திகதியன்று அவசரகால நிலை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்தநிலையில் இன்றைய வாத விவாதங்களின்போது ஆளும் கட்சியினரும் எதிர்கட்சியினரும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்