மஹிந்த, பசில் ஆகியோருக்கான பயணத்தடை நீடிப்பு
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீதிமன்று நீடித்துள்ளது.
குறித்த இருவருக்குமான பயணத்தடையை ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி வரை நீடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் என – குறித்த இருவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள காரணத்தினால் இவ்வாறு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.
தொடர்பான செய்தி: மஹிந்த, பசில் நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள்: அவர்களின் சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றுக்கு அறிவிப்பு