தேசிய எரிபொருள் அனுமதிக்காக 40 லட்சம் பேர் பதிவு

🕔 July 27, 2022

தேசிய எரிபொருள் அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை நேற்று (26) மாலை வரை நான்கு மில்லியனை (4,096,824) தாண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

புதிய முறையானது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் 299 எரிபொருள் நிலையங்களிலும் ஐ.ஒ.சியின் 34 நிலையங்களிலும் நேற்று சோதனை செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள 333 நிரப்பு நிலையங்கள் புதிய முறைமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்