அரச நிறுவனங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்
அரச நிறுவனங்கள் சிலவற்றுக்கு புதிய அதிகாரிகளை நியமித்துள்ளதாக அமைச்சரவை இன்று (26) அறிவித்துள்ளது.
அதன்படி
- உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக டி.ஆர்.எஸ். ஹப்புஆராச்சி
- திறைசேரியின் பிரதிச் செயலாளராக டப்ளியூ.ஏ. சத்குமார
- இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகமாக பி.பி.எஸ்.சி. நொனிஸ்
- தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஜூட் நிலூஷன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட நியமனங்களுக்கு நேற்று மாலை கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.