கோட்டாவை உடனடியாகக் கைது செய்யுமாறு, சிங்கப்பூர் சட்ட மா அதிபரிடம் சர்வதேச அமைப்பு முறைப்பாடு

🕔 July 24, 2022

லங்கையின் முன்னாள் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவை போர்க் குற்றங்களுக்காக உடனடியாகக் கைது செய்யுமாறு கோரி, சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் (International Truth and Justice Project) சட்டத்தரணிகள் சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்றப் புகார் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் போது ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, ஜெனிவா ஒப்பந்தங்களை கடுமையாக மீறினார் என்றும், இவை சிங்கப்பூரில் உலகளாவிய அதிகார வரம்புக்கு உட்பட்ட உள்நாட்டு வழக்குகளுக்கு உட்பட்ட குற்றங்கள் என்றும் 63 பக்கங்களைக் கொண்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது ஜெனிவா உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச குற்றவியல் சட்டங்களை கோட்டாபய ராஜபக்ஷ கடுமையாக மீறியதாக இந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொலை, மரணதண்டனை, சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தை, கற்பழிப்பு, பிற பாலியல் வன்முறைகள், சுதந்திரத்தை பறித்தல், கடுமையான உடல் மற்றும் மனநல பாதிப்புகளை ஏற்படுத்தியமை மற்றும் பட்டினியினை ஏற்படுத்தியமை இந்தக் குற்றங்களுள் அடங்கம் எனவும் மேற்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்