தேசிய எரிபொருள் அனுமதி திட்டம் 25 மாவட்டங்களிலும் சோதனை

🕔 July 23, 2022

தேசிய எரிபொருள் அனுமதி திட்டம் (National Fuel Pass program) 25 மாவட்டங்களிலும் இன்று (23) தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சோதனை செய்யப்படவுள்ளது.

“தேசிய எரிபொருள் அனுமதிச் இன்று கொழும்பில் 02 இடங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்தத் திட்டம் 25 மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளை சோதனை செய்யப்படும். சோதனை முடிவடைந்தவுடன் இதனை தேசிய அளவில் அறிமுகம் செய்ய எதிர்பார்க்கிறோம்” என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று தெரிவித்திருந்தார்.

தேசிய எரிபொருட் திட்ட அனுமதிக்கு இணையத்தளத்தில் பதிவு செய்து, அதற்கான அனுதியை QR முறைமையில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் தற்போது வாகனங்களின் இறுதி இலக்கங்களின் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்