கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல்; ஒருவர் பலி: 500 பேர் தப்பியோட்டம்

🕔 June 29, 2022

பொலன்னறுவை – கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புனர்வாழ்வு பணியக ஆணையாளரின் கீழுள்ள கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில், சுமார் ஆயிரம் கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதலுக்கு மத்தியில் 500க்கும் மேற்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் ராணுவத்தினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்