தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: மெய்யியல் துறை பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார் கலாநிதி மாஹிர்

🕔 June 25, 2022

ஏ.எல்.எம். ஷினாஸ்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் – மருதமுனையை சேர்ந்த கலாநிதி ஐ.எல்.எம் மாஹிர், மெய்யியல் துறை பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார். 

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில்இன்று (25) நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத் தீர்மானத்துக்கமைய 09.11.2020ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இவர் பேராசிரியராக  பதவியுயர்வு பெற்றுள்ளார்.

மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், தனது பாடசாலைக் கல்வியை மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியிலும் (தேசிய பாடசாலை), உயர் கல்வியை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் விஷேட துறையிலும் பெற்றுக்கொண்டார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முது தத்துவமாணி பட்டத்தையும் கலாநிதி பட்டத்தையும் இவர் நிறைவு செய்துள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2016 தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை, சமூக விஞ்ஞானத் துறையின் தலைவர் பதவி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புக்களை வகித்துள்ள இவர் – உளவியல், மெய்யியல் துறைகளில் தனது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதோடு தேசிய, சர்வதேச ஆய்வு மாநாடுகளிலும் பங்குபற்றி தனது ஆய்வுகளை சமர்ப்பித்துள்ளதுள்ளார்.  

துறை சார்ந்த பல நூல்களையும் இவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்