ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த 21ஆவது திருத்தம்: நீதிமன்றின் அறிவிப்பை, சபாநாயகர் வெளியிட்டார்
ஐக்கிய மக்கள் சக்தியினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்தத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற, மூன்றில் இரணை்டு பெரும்பான்மையும் பொதுசன வாக்கெடுப்பும் அவசியம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் குறித்த தீர்மானத்தை இன்றைய (21) நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.
முன்வைக்கப்பட்டுள்ள திருத்தத்தில் பல சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவையாக காணப்படுவதால், அவற்றை நிறைவேற்ற பொதுசன வாக்கெடுப்பு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.