எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கோரி, கல்முனையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

🕔 June 20, 2022

– பாறுக் ஷிஹான் –

ரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி ஆசிரியர்கள்  கல்முனையில் நேற்று (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் கல்வி  சேவையில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டுமெனக் கோரி, சம்பந்தப்பட்டவர்கள்   உடனடி நடவடிக்கை எடுக்குமாறு – க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பீடு கடமைக்காக வந்திருந்த ஆசிரியர்கள்  இவ்வாறு  ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

‘வரிசையில் நிற்போரே உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை சிந்தியுங்கள்’, ‘எரிபொருள் இல்லாமல் கடமையை தொடர முடியாது’, ‘கொழும்பு பாடசாலைக்கு மட்டுமா எரிபொருள் பிரச்சினை’ என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆசிரியர்கள் தமது ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

கல்முனை வெஸ்லி உயர்தர தேசிய  பாடசாலை முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம், பிரதான வீதி வழியாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தை வந்து 0 நிறைவடைந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அப்பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தின் முன்பாகவும் சிறிது நேரம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததுடன்.

இறுதியாக கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்  – இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்  தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா தலைமையிலான ஆசிரியர் குழுவினருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்