அரிசியை பதுக்கினால், அதிக விலைக்கு விற்றால் அறிவிக்கலாம்

🕔 June 15, 2022

– பாறுக் ஷிஹான் –

ம்பாறை மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்களில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு அரிசியினை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு வருவதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட உயர் அதிகாரி   தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைலையடுத்து, மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாதவகையில் அத்தியவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதோடு, கட்டுப்பாட்டு விலை நிர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த 10.06.2022ம் திகதியன்று வெளியிடப்பட்ட 2283/43ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில், ஒரு கிலோ நாடு அரிசி 220 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 230 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 260 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, அரிசியினை பதுக்கி வைத்து – சந்தையில் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்து, சில வர்த்தகர்கள் கூடுதலான விலைக்கு அதனை விற்பனை செய்வதாக பொதுமக்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து பதுக்கல் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை 1977 எண்ணுக்கு அல்லது அம்பாறை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சபையின் 0632222355 எனும் இலக்கத்துக்கு தொலைபேசி மூலம் அறிவிக்க முடியுமெனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

இவ்வாறான வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்பின் போது கண்டுபிடிக்கப்படும் வர்த்தகர்களுக்கெதிராக நீதிமன்றினூடாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டத்துக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்