21ஆவது திருத்தம் இழுத்தடிக்கப்படுகிறது: அமைச்சரவைக்கு இந்த வாரமும் வரவில்லை

🕔 June 14, 2022

ரசியலமைபுக்கான 21வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவதை அமைச்சரவை ஒத்திவைத்துள்ளது.

அரசியலமைபுக்கான 21வது திருத்தச் சட்டம் தொடர்பில் அரசியல் கட்சித் தலைவர்களை மேலும் தெளிவுபடுத்த வேண்டியதன் காரணமாக நேற்று (13) அமைச்சரவையில் நிறைவேற்றப்படவில்லை என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கட்சிகளின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.

குறித்த சட்டமூலத்துக்கு எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்