எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ‘மொட்டு’ எம்.பி நாலக கொடஹேவா

🕔 June 13, 2022

பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் அலுவலகத்தில் இன்று (13) நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

எதிர்க்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ விடுத்த அழைப்பின் பேரில் தான் கலந்துரையாடலில் கலந்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கொடஹேவா தெரிவித்துள்ளார்.

“எதிர்க்கட்சித் தலைவரால் இன்று அவருடைய அலுவலகத்தில் சீர்திருத்தவாதிகளால் முன்வைக்கப்பட்ட விளக்கத்தைக் கேட்க என்னை அழைத்திருந்தார்கள்.அது அரசியல் கலந்துரையாடல் அல்ல” என நாடாளுமன்ற உறுப்பினர் கொடஹேவா ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில், தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் உட்பட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்