பசில் ராஜபக்ஷவின் ‘ரிங் டோன்’: அவரே சொன்ன விடயம்

🕔 June 9, 2022

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக்காரர்களால் தன்னைக் குறித்துப் பயன்படுத்திய பிரபலமான கோஷம் குறித்து பசில் ராஜபக்ஷ இன்று ஊடக சந்திப்பின் போது நகைச்சுவையாகப் பேசியுள்ளார்.

ஆங்கில நேர்காணல் ஒன்றில்பசில் ராஜபக்ஷ பேசும் போது, காகங்களை சிங்கள மொழியில் ‘கபுடாஸ்’ என்று குறிப்பிட்டதை அடுத்து, பசிலை ‘கபுடா’ எனக் குறிப்பிடும் கோஷம் உருவானது.

காலி முகத்திடல் மைதானத்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் சிங்கள வார்த்தையையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவின் பெயரையும் இணைத்து; “கபுடு கா கா கா… பசில்… பசில்… பசில்’ எனும் கோஷத்தை எழுப்பி வந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை அறிவிக்கும் வகையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ஷ, தற்போது பிரபலமாகவுள்ள கோஷம் குறித்து நகைச்சுவையாகப் பேசினார்.

“பசில் பசில் பசில்’ என்பதுதான் இப்போது எனது ரிங்க் டோன்” என்று ஊடகவியலாளர்களிடம் பசில் ராஜபக்ஷ நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்