மருதமுனையில் அரிசி பதுக்கிய கடை, அதிகாரிகளால் முற்றுகை: பழைய விலைக்கு விற்பனை
🕔 June 9, 2022
– பாறுக் ஷிஹான் –
மருதமுனையில் அரிசி பதுக்கி வைக்கப்பட்ட கடையை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் முற்றுகையிட்டதோடு, பழைய விலைக்கு பொதுமக்களுக்கு அரிசியை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
மருதமுனை பகுதியில் அரிசி பதுக்கல் இடம்பெறுவதாக வியாழக்கிழமை (9) நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.
இதற்கமைய அவ்விடத்துக்குச் சென்ற நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் குழு, அரிசி பதுக்கல் இடம்பெற்றதாக அடையாளம் காணப்பட்ட கடைக்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன், பழைய விலைக்கு அரிசிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் “பொதுமக்களே உடனே விரையுங்கள். குறைந்த விலையில் அரிசினை பெறுங்கள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளும் உள்ளனர்” என அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலின் ஒலிபெருக்கியிலும் அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு அதிகளவான மக்கள் வருகை தந்து அரிசியினை கொள்வனவு செய்து சென்றதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை இவ்வாறான அரிசி பதுக்கப்படுகின்றமை பற்றி அறிந்தால், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் அதனை முறியடிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.