பசிலின் மனைவி புஷ்பா, அமெரிக்கா பறந்தார்

🕔 June 9, 2022

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி இன்று (09) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

புஷ்பா ராஜபக்ஷ முதலில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மூலம் அதிகாலை 3:15 மணிக்கு துபாய்க்கு செல்வார் என்று விமான நிலையத் தகவல்கள் தெரிவித்திருந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பின்னர், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பசில் ராஜபக்ஷ இன்று ராஜிநாமா செய்துள்ளார்.

பசில் மற்றும் அவரின் மனைவி அமெரிக்கா மற்றும் இலங்கை பிரஜாவுரிமைகளைப் பெற்றுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்